Saturday, 9 November 2013

பெண்களுக்கு முகநூலில் பிரச்சனை...

பெண்களுக்கு முகநூலில் பிரச்சனை என்ன என்பது முதலில் தெரிய வேண்டும்.

பெண்கள் முகத்தை காட்டவே கூடாது என்று சிலர் தாலிபான்கள் போல கோஷம் போடுகின்றனர்.

அதில ஒருவர் முகநூலை விட்டே பெண்கள் போக வேண்டும் என்று.

முகநூலில் இப்படி நடக்கிறது , இதற்கு என்ன செய்யலாம், எப்படி புகார் செய்ய வேண்டும் என்ற ஆக்கபூர்வமான விவாதங்கள் சிலர் மட்டும் செய்கின்றனர்.

ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றால் வீட்டை விட்டு வெளியில் வரகூடாது, வீட்டிற்கு உள்ளேயும் ஆண்களை அனுமதிக்க கூடாது.

படங்கள் இங்கு மட்டும் இல்லை , செல்போனில் பொது இடங்களில் எடுக்கும் படங்களும் ஷேர் செய்யபடுகின்றன.

அப்படி என்றால் முகம், கை, கால்களை மூடி கொண்டே நடக்க வேண்டும்.

சாத்தியமில்லாத விஷயங்களை விவாதிப்பதற்கு பதிலாக இணையத்தில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவது பற்றி விவாதித்து நடவடிக்கை செய்ய ஏற்பாடு செய்யலாம்.

ப்ளாக் செய்வதற்கு பதிலாக சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு பெறலாம்.

இந்தியாவில் மட்டும்தான் இது போன்று நடப்பதாக வெளிநாடு தோழிகள் சொல்கிறார்கள்.

பின்குறிப்பு:

ஆண்கள் படங்களும் ஷேர் செய்யபடுகின்றன . ஹோமோ வலை பக்கங்களில். அப்பொழுது ஆண்களும் முகத்தை போடக்கூடாது என்று சொல்ல வேண்டிய நிலை வரலாம். 

No comments:

Post a Comment