Facebook Safety
நான்கு வருடமாக முகனூலில் இருக்கின்றேன். இதுவரை எனக்கோ என்னால் மற்றவர்களுக்கோ எந்த பிரச்சனையும் கொடுத்ததில்லை வந்ததும் இல்லை.
காரணம் நான் அதிகமாக யாருடனும் சாட் செய்வதில்லை அல்லது தேவையில்லாமல் போன் நம்பரை பகிர்வதும் இல்லை. இதுவரை அதிக பட்சமாக மூன்று நான்கு பெண்களிடமும் ஒரு பத்து பனிரண்டு ஆண் நண்பர்களுடனும் சாட் செய்கிறேன் அல்லது போனில் பேசுகிறேன்.
அவ்வளவே...நமக்கு வரும் நல்லவை கெட்டவை எல்லாமே நம்மால்தான் வருகின்றது. இதற்க்கு மற்றவர்களை ஒரு அளவிற்க்குத்தான் குற்றம் சொல்லமுடியும். எல்லா விஷயங்களிலும் பிளஸ் மைனஸ் இருக்கத்தான் செய்கிறது.
இன்னொன்று முகனூல் என்னைப்பொறுத்தவரைக்கும் மக்களின் எழுத்துக்களை அறியத்தான் அல்லது பெர்சனல் விஷயங்களை அறிந்துக்கொள்ள அல்ல. மார்க் இதை ஆரம்பித்தபோது நட்புக்களையும் பழைய மாணவ நண்பர்களையும் அறியவே இதை உருவாக்கினார். ஆனால் முகனூலின் நோக்கம் இப்போது அதுவாக இல்லை...செய்திகளை முந்தித்தரும் ஊடகத்தின் இன்னொரு நிலையாக மாறிவிட்டது கொடுமை. அத்தோடு இல்லாமல் மக்கள் தங்களின் அந்தரங்க விஷயங்களை பதிவதற்க்காகவும், அந்தரங்க நிகழ்வுகளின் படங்களை பகிரவும் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
முகனூலில் மட்டும் தவறுகள் நடப்பதில்லை அது எல்லா நிலையிலும் எதிர்பாராத வகையில் நடக்கும். தவறுகளை எதிர்க்கொண்டு மீண்டும் நடக்காத வகையில் நம்மை பாதுகாப்பது அவசியம். மற்றவர்களுக்கு இடமும் கொடுத்துவிட்டு பின்னர் குத்துதே குடையுதேன்னா அதுக்கு பாவம் முகனூல் என்ன செய்யும்???
முகமறியா மக்களின் ஸ்டேட்டஸ்களையும் பகிர்வுகளையும் வைத்துக்கொண்டு எடை போடுவது கஷ்டம். ஆனாலும் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் தவறுகள் இணையத்தில் நடப்பது வாடிக்கைதான். காரணம் அதற்க்கென்றே அலையும் சைக்கோக்களை கண்டறிவது கொஞ்சம் கஷ்டமே.
நாம்தான் உஷாராய் இருப்பது நலம்.எதுவுமே அளவாக இருந்தால் நமக்கும் மற்றவர்களுக்கும் நல்லதே!!!
No comments:
Post a Comment